ஸ்மார்ட்போன் வாங்கி தர மறுத்த தந்தை.. பைனல் இயர் மாணவன் விபரீத முடிவு

x

மேலூரில் செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆலம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அண்ணாமலை. தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வரும் இவர், தனது பெற்றோரிடம் ஸ்மார்ட் போன் கேட்டதாகவும், அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அண்ணாமலை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்