தாம்பரத்தில் 5 ரூபாய்க்கு இஞ்சி தர மறுத்த மளிகை கடைக்காரருக்கு நேர்ந்த கதி - கஸ்டமர் செய்த காரியம்

x

தாம்பரம் அருகே, 5 ரூபாய்க்கு இஞ்சி கேட்டு தரமறுத்த கடைக்காரர் மீது, சரமாரியாக தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வணிகர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த சுடலைமணி என்பவரின் மளிகைக் கடைக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவரு வந்து, 5 ரூபாய்க்கு இஞ்சி கேட்டுள்ளார். இஞ்சி விலை அதிகரித்துள்ளதால், 5 ரூபாய்க்கு இஞ்சி இல்லை என சுடலைமணி கூறியதால், ஆத்திரமடைந்த அந்த நபர், 10க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, மளிகை கடை காரரை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக சுடலை மணி மற்றும் வணிகர் சங்கத்தினர், சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர் கூறியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்