தூக்கில் தொங்கிய பிரபல தமிழ் நடிகை.. முதல் ஆளாக கதவை உடைத்த "அந்த" நபர் - அதிரடி காட்டும் போலீஸ்

x

வாய்தா திரைப்பட நடிகை தீபா தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன்பாக தீபா யாரிடம் எல்லாம் பேசினார்?

மற்றும் தற்கொலைக்குப் பின் முதல் ஆளாக கதவை உடைத்து வந்த பிரபாகரன் என்பவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நடிகை தீபா தற்கொலைதான் செய்து கொண்டாரா ? அல்லது அவரை தற்கொலைக்கு தூண்டினார்களா ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு நடிகை தீபாவின் உடல் சொந்த ஊரான ஆந்திராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்