பிரபல ரவுடி பழிக்கு பழியாக வெட்டி படுகொலை...கொலையாளிகளை தீவிரமாக தேடும் போலீசார்

x

தூத்துக்குடியில் பழிக்கு பழியாக பிரபல ரவுடி ஒருவர், வீடு புகுந்து வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மீது 3 மூன்று கொலை வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2017-ம் ஆண்டு ஈஸ்வரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, கருப்பசாமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பி சென்ற 8 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்