வெடித்தது மர்ம பொருள்..நள்ளிரவு 1 மணிக்கு கேட்ட பயங்கர சத்தம்..தொடரும் சம்பவத்தால் பரபரப்பாகிய பஞ்சாப்

x

சீக்கியர்களின் புனித தலமான பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமிர்தசரஸில் உள்ள பாரம்பரிய தெரு அருகே நள்ளிரவு 1 மணியளவில் திடீரென மர்ம பொருள் வெடித்துள்ளது. கடந்த 5 நாட்களில் நடந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் விரைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்