ரூ.1.5 லட்சத்தை சுருட்டி விட்டு வழிப்பறி நாடகம் ஆடிய ஊழியர்...சிறப்பு கவனிப்பு செய்த போலீசார்

x

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மகேந்தர் என்பவர், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், 2 நாட்களுக்கு முன்பு, பணம் வசூல் செய்து விட்டு இரவு நேரத்தில் திரும்பும்போது, ஒரு கும்பல் ஒன்றரை லட்ச ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, மகேந்தர் கூறிய தகவல்கள் அவர் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கொள்ளைச் சம்பவம் நடந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, மகேந்தரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனது நண்பர் சுக்காராமுடன் சேர்ந்து பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர.


Next Story

மேலும் செய்திகள்