கதவை தலையால் முட்டி உடைத்து... அரிசி, பருப்பை திருடிச்சென்ற யானைகள்

x

மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகள் கோவில் கதவை உடைத்து, அரிசி, பருப்பு ஆகியவற்றை சாப்பிட்டுச் சென்றுள்ளன.

கட்டாஞ்சி மலைப்பகுதியில் உள்ள தண்டிபெருமாள் கோவிலின் வெளிப்புற கேட்டை உடைத்து உள்ளே புகுந்த நான்கு காட்டு யானைகள், ஒரு அறையின் கதவை தலையால் முட்டி, அங்கிருந்த அரிசி, பருப்பு, வெல்லம் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டுச் சென்றுள்ளன. காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி, கோவில் சேதமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, காட்டு யானைகள் உணவுப்பொருள்களை சாப்பிட்டுச் சென்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்