தோட்டத்திற்கு சென்றவரை தும்பிக்கையால் தூக்கி எறிந்த யானை..

x

தமிழக-கேரள எல்ல ையில் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட எல்லையில் உள்ள ஆரியங்காவு அருகே, பிளமிங் தொழிலில் ஈடுபட்டுள்ள சோபால் என்பவர், தேயிலைத் தோட்டத்தில் பழுதான மோட்டார் பம்பு செட்டை பழுது பார்க்க சென்றார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை, சோபாலை விரட்டியதுடன், தும்பிக்கையால் தூக்கி எறிந்தது. இதில் குடல் சரிந்து படுகாயமடைந்த சோபாலை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்