ராங் ரூட்டில் வந்த கார் ஓட்டுநர்... காவலரை ஒருமையில் பேசி அட்டூழியம் - தீயாய் பரவும் காட்சிகள்

x

சென்னை எழும்பூரில் போக்குவரத்து தலைமை காவலருடன் கார் ஓட்டுநர் ஒருவர் ஒருமையில் பேசி தகாராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எழும்பூர் அருகேயுள்ள நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து தலைமை காவலர் அருள் என்பவர் பணியில் இருந்துள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக மாலை முதல் இரவு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட அந்த நான்கு வழிச்சாலையில் கார் ஓட்டுநர் ஒருவர் ராங் ரூட்டில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காரை நிறுத்திய காவலர் ஓட்டுநரை எச்சரித்த நிலையில், காவலருக்கும் ஓட்டுநருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், காவலரை ஓட்டுநர் ஒருமையில் பேசிய நிலையில், சம்பவம் குறித்து காவலர் விளக்கமளித்த வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்