சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவனை கடித்த நாய்கள்..... மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

x

கேரளாவில் சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி சிறுவனை தெரு நாய்கள் கடித்து தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே கூராச்சுண்டு பகுதியில் பள்ளி மாணவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, மாணவர்கள் கிளம்பும் தருவாயில், அருகில் இருந்த நாய்கள் ஒரு மாணவன் மீது பாய்ந்து கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நாய்களை விரட்டி மாணவரை மீட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்