டியூசன் சென்று வீடு திரும்பிய மாணவிகள்... - விடாமல் விரட்டிய தெரு நாய்... வெளியான அதிர்ச்சி வீடியோ...

x

சென்னை அடுத்த தாம்பரத்தில் டியூசன் சென்று விட்டு, வீடு திரும்பிய மாணவிகளை தெரு நாய் விரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

குரோம்பேட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் டியூஷன் முடித்து விட்டு, தங்களது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியில் இருந்த தெரு நாய் ஒன்று, அவர்களது, இரு சக்கர வாகனத்தை துரத்தி சென்றது.

இதில், நிலைதடுமாறி கீழே வழிந்த மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்