ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர்.! - மீண்டும் கட்சியில் சேர்ப்பு

x

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசியதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை வடக்கு மாவட்ட திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரியில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய வீடியோ வைரலானது. இதுகுறித்து காவல் ஆணையரிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவரிடம் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கட்சி உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்