கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகி... அதிரடியாய் கைது செய்த போலீஸ்..

x

ஓசூரில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாக கூறி திமுக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூர் அருகே சேவகானப்பள்ளி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ராமசாமி. இவரை கொத்தளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவர், சிட்டா அடங்கல் பணிகளுக்காக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பணியை முறையாக செய்து கொடுக்காமல் ராமசாமி அலைக்கழித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீனிவாசன், தன்னை தாக்கியதாக கூறி ராமசாமி போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சீனிவாசனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்