ஆட்டோ ஓட்டி அசத்திய திமுக எம்எல்ஏ... கை தட்டி ஆரவாரம் செய்த பொதுமக்கள்

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்எல்ஏ ஆட்டோ ஓட்டியது பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஆட்டோவை ஆய்வு செய்து, பின்பு திடீரென ஆட்டோவை ஓட்டினார். இந்த காட்சிகளை பார்த்தவர்கள், கைத்தட்டி ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்