கள்ளழகரை காண காத்துக் கிடந்த பக்தர்கள் - விசிறியை வீசி இளைப்பாற்றிய காவலர்கள்!

x

மதுரையில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு கை விசிறி வீசி களைப்பை போக்கிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வண்டியூர் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கானோர் குவிந்த நிலையில், வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் அவதிப்பட்ட பக்தர்களுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விசிறியால் வீசி இளைப்பாற்றினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்