வெளிநாட்டு பரிசுப்பொருள் மீது இருந்த ஆசை.. வடநாட்டு இளைஞர்கள் போட்ட பிளான்.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நாகர்கோவில் பெண்

x

கன்னியாகுமரியை சேர்ந்த பெண், அடையாளம் தெரியாத சைபர் மோசடி நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் செல்போன் மூலம் அறிமுகமான இருவர், வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொருட்கள் வாங்கி தருவதாக கூறி, 9 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்த நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சதீஷ் குமார், அமான் கான் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக உத்தரப்பிரதேசம் விரைந்த சைபர் கிரைம் போலீசார், இருவரையும் கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்