திடீரென கேட்ட"ஏய்" சத்தம்..அடுத்தநொடி..திருட சென்ற வீட்டிலேயே பிணமான நபர் -சென்னையை உலுக்கிய சம்பவம்

x

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இளைஞர்கள் மோகன்ராஜ் உட்பட சிலர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். இரவு நேரத்தில், அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு இளைஞர்கள் தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென அறைக்குள் வெளிச்சம் தெரிவதைக் கண்ட மோகன்ராஜ், அங்கு சென்று பார்த்தபோது ஒரு நபர் செல்போன் திருட முயற்சிப்பதை கண்டுள்ளார். பின்னர் அவர் கூச்சலிடவே, திருட வந்த நபர் தப்பிப்பதற்காக 3வது மாடியில் இருந்து கீழே குதித்ததில், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்த நபர், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்