பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த தம்பதிபோலீசை பார்த்ததும் தலைமறைவான கணவர்

x

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்திரா நகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, அங்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ்குமார் - தமிழரசி என்ற தம்பதி, கோயம்புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தமிழரசியை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான சுரேஷ் குமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்