இருதரப்பினர் இடையே தொடர்ந்த மோதல்.. எதிர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்.. பரபரப்பு காட்சி

x

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் சரவணபிரபு என்பவர் இ-சேவை மையம் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார்.

இவருக்கும், அருகில் கடை நடத்தி வரும் ஷேக் முகமது என்பவருக்கு நிலத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், தனது கடையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து, அதனை சரவணபிரபு கடையின் முன்பு வீசுமாறு ஷேக் முகமது கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அந்நபர் பெட்ரோல் குண்டு வீசும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஷேக்முகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்