"இந்தா வந்துருச்சுங்க... வசை பாடிய கண்டக்டர்" - அரசு பஸ்சை நிறுத்தி வெளுத்து வாங்கிய பெண்

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை, பெண் ஒருவர் தனியாக வழிமறித்து நிறுத்தி, ஓட்டுநரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

செங்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் மகளிர் இலவச அரசுப் பேருந்து, மண்மலை பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். இலவச பேருந்தில் பெண்களை ஏற்றினால் தங்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை என பேருந்து ஓட்டுநர்கள் கூறுவதாகவும், அப்பெண் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்