நெல்லையை பந்தாடி கோப்பையை தட்டித் தூக்கியது கோவை அணி!

x

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பின்னர், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 15 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோவை அணி கோப்பையை கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்