ஏரி உடைந்து மிதக்கும் நகரம்..தர்மாகோலில் வீட்டுக்கு செல்லும் தி பாய்ஸ்
ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையால், ஏரி உடைந்து அஜ்மீர் நகரம் தண்ணீரில் மிதக்கிறது. அங்கு சில நாட்களாக தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அஜ்மீர் நகரில் உள்ள பிரதான ஏரியான அனாசாகர் ஏரி நிரம்பி வழிந்து, உடைப்பெடுத்தது. இந்த வெள்ள நீர் நகரப்பகுதியில் புகுந்து சாலைகளில் பெருக்கெடுத்தது. இதனால், வாகனங்கள் தண்ணீரில் மிதந்தவாறு ஊர்ந்து சென்றன. பொதுமக்கள் சாலையோரத்தில் உள்ள நடைமேடைகளில் தங்களது இருசக்கரவாகனங்கள் தள்ளிக்கொண்டு சென்றனர். ஏரி உடைப்பால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Next Story