சூப்பர் மார்க்கெட்டில் நெய் திருடியவரின் மானத்தை திருடிய சிசிடிவி.."தேவையா இது?"

x

சூப்பர் மார்க்கெட்டில் நெய் திருடியவரின் மானத்தை திருடிய சிசிடிவி.."தேவையா இது?"

சென்னை அடுத்த கொரட்டூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், இளைஞர் ஒருவர் நெய் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொரட்டூரில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர், பொருட்களை வாங்குவது போல் நடித்து நெய் டப்பாவை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

இதனிடையே சந்தேகம் அடைந்த பணிப்பெண், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, நெய் டப்பாவை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கொரட்டூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்