கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீர்.. குலவையிட்டு, மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

x

அறந்தாங்கி அருகே கடமடை பகுதிக்கு வந்த காவிரி நீரை, விவசாயிகள் குலவையிட்டும், மலர்தூவியும் வரவேற்றனர். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீரானது, புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கடைமடை பகுதிக்கு வந்து சேர்ந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், குலவையிட்டும், மலர் தூவியும் காவிரி நீரை வரவேற்றனர். அதேவேளையில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் போதுமான அளவு நடைபெறாததால், இறுதி வரை முழு கொள்ளளவில் நீர் செல்லுமா என்பது சந்தேகமே என கூறிய விவசாயிகள், வரும் காலங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை சரிவர மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்