நாட்டை உலுக்கிய நரபலி வழக்கு - குற்றவாளி வைத்த கோரிக்கை... கொந்தளித்த கேரளா அரசு

x

கேரளாவின் இரட்டை நரபலி வழக்கில் இரு வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் பெண்கள் இருவர் நரபலி செய்யப்பட்ட வழக்கில், மருத்துவ தம்பதிகளான பகவல்சிங், லைலா மற்றும் மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறையில் உள்ள மருத்துவர் லைலா ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் அளித்த மனுவிற்கு, கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இரட்டை நரபலி வழக்கில் குற்றபத்திரிக்கை தயாரித்து வருவதாகவும், இன்னும் இரு வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்