மாவட்ட ஆட்சியரை தாக்கிய வழக்கு... ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்

x

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை தாக்கிய வழக்கில், எம்.பி, நவாஸ்கனியின் உதவியாளருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை எம்.பி, நவாஸ்கனியின் உதவியாளர் விஜயராமு கீழே தள்ளி விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயராமு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜயராமுவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்