சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக சென்ற கார்.. காரோடு இழுத்து செல்லப்பட்ட காவலர்

x

மஹாராஷ்டிராவில் சிக்னலில் நிற்காமல் சென்ற காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர், காரின் முன் பகுதியில் சிக்கி ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார். மஹாராஷ்டிர மாநிலம் வசாய் நகரில் சிக்னலில் நிற்காமல் சென்ற காரை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் கார் நிற்காமல் வேகமாகச் சென்றதால், அந்த காவலர் காரின் முன்பகுதியில் சிக்கி 1.5 கிமீ தூரம் இழுத்து செல்லப்பட்டார். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டிச்சென்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்