3 நாட்கள் அனாதையாக நின்ற கார்.. திடீரென எரிந்த பார்க்கிங் லைட் .. உள்ளே சீட் பெல்ட் அணிந்த படி சடலம்

x

காஞ்சிபுரம் அருகே பூட்டப்பட்ட காரினுள் வடமாநில இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்த நிலையில், 3 நாட்களாக காரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காரின் பார்க்கிங் லைட் மட்டும் திடீரென எரிந்ததால், அருகே சென்று பார்த்த போது, ஓட்டுநர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்த படி ஒருவர் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரில் சடலமாக கிடந்தது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் சிங் என்பதை கண்டறிந்தனர். இவர் திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உறவினர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்ததாகவும், சில நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதால் இளைஞரை வேலையிலிருந்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், அஜய்குமார் சிங் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்