தாறுமாறாக தறிகெட்டு ஓடிய கார்..கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் சென்ற சோகம் | Nellai | Car Accident

x

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் கார் சீறிப்பாய்ந்த நிலையில், காரில் ஏர் பேக் திறந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்த வினோத் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் உவரிக்கு வந்து விட்டு அங்கிருந்து கன்னியாகுமரி சென்றுள்ளார். கூடங்குளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஒடையில் கார் சீறிப்பாய்ந்தது. அப்போது காரில் உள்ள ஏர் பேக் திறந்ததால், காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்