சவ ஊர்வலத்தில் 3 உயிரை காவு வாங்கிய கொடூரம்!

x

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில், சவ ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தம்பிகனி பள்ளி பகுதியை சேர்ந்த மூதாட்டி ரானாம்மா என்பவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டுச் சென்ற போது, உயர் மின் அழுத்த கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்தது. இதில், சவ பெட்டியை சுமந்து சென்ற மூன்று பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக, மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்