சிறை சென்று வந்த நபருக்கு நேர்ந்த கொடூரம்...சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை அம்பத்தூர் அருகே கொலை வழக்கில் சிறை சென்று வந்த நபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களபுரம் பகுதியை சேர்ந்த விடியல் என்பவர், கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார். இந்நிலையில், தனது ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஆட்டோவை தாக்கி, விடியலை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த கொலையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்