தாயே மகளைக் கொன்ற கொடூரம் ...தானும் தற்கொலைக்கு முயன்ற சோகம் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

x

மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சோகம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. சுங்கதகட்டே பகுதியை சேர்ந்த சுமா என்ற பெண்ணின் குழந்தை மன வளர்ச்சி குன்றி காணப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த ஆண்டு கணவனை இழந்ததால், மகளை வளர்க்க முடியாமல் சுமா சிரமத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மகளின் நிலையை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளான சுமா, சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், தானும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர், சுமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்