குடிபழக்கத்தால் நிகழ்ந்த கொடூரம்- ஆத்திரத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு- சென்னையில் அதிர்ச்சி

x

மாங்காடு அருகே குடி போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை மகன் தாக்கியதால், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்.

இவரின் மனைவி உமாராணி. இவர்களுக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில், தீடிரென கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவமனை உடற்கூராய்வில் கோவிந்தராஜின் தலையில் வெட்டு காயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி மற்றும் மகனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு சமையல் செய்து தர சொல்லி தாயை அடித்ததில் ஆத்திரமடைந்து மகன் தாக்கியுள்ளதாகவும், மகன் தாக்கிய வேதனையில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்