ரசிகர்களுக்கும் வெறியர்களுக்கும் இருக்குற வித்தியாசம் இதான்.. உலகை அதிரவைத்த கொடூர காட்சிகள்

உலக‌க்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோவிடம் பெல்ஜியம் அணி தோற்றதால், பிரஸெஸ்சில் அந்நாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற கார்கள் உள்ளிட்டவற்றை தாக்கி சேதப்படுத்தியதோடு, பொருட்களை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ரசிகர்களை விரட்டியடித்தனர். இந்த கலவரம் காரணமாக, மெட்ரோ நிலையங்கள், பேருந்து, டிராம் சேவைகள் நிறுப்பட்டுள்ளன. 

X

Thanthi TV
www.thanthitv.com