13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை அத்துமீறல்-பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.. சாட்சியாக இருந்த முதியவரும் வன்கொடுமை செய்த கொடூரம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 13 வயது சிறுமியை பல முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனையும், அதனை நோட்டமிட்டு மிரட்டி அத்துமீறிய முதியவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

காய்கறி வியாபாரம் செய்து வரும் முனியாண்டி என்ற 37 வயதான நபர், ஒன்பதாம் வகுப்பு மாணவியான 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் சிறுமியின் பெற்றோரை தூக்கி விடுவேன் என மிரட்டி, பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த பங்க் கடை உரிமையாளரான 55 வயது முதியவர் சந்திரன் சிறுமியை மிரட்டு வன்புணர்வு செய்துள்ளான். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கவனித்த பெற்றோர் விசாரித்த போது, மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து முனியாண்டி மற்றும் முதியவர் சந்திரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்