தம்பி மனைவியை கொன்ற அண்ணன் - வெளியான பகீர் பின்னணி

x

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே, சொத்திற்காக தம்பி மனைவியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அய்யாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர், முதல் மனைவி இறந்த நிலையில், தங்கம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், தங்கம் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த புளியங்குடி போலீசார், தங்கத்தின் கணவரின் அண்ணனான முத்தையாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் சொத்து விவகாரம் தொடர்பாக இருவரிடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், அதனால் கொலை செய்ததாகவும் தங்கையா ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்