தாலி கட்டும் நேரத்தில் ஓடிய மாப்பிள்ளை.. 20 கிமீ துரத்தி பிடித்து தூக்கி வந்த மணப்பெண்

x

காதலித்து விட்டு கைகழுவ திட்டமிட்ட இளைஞரை, இளம்பெண் தூக்கிச் சென்று தாலிக்கட்டிய சுவாரஸ்ய சம்பவம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்..

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார்.

2 ஆண்டுக்கு மேலாக காதலித்தவர்கள் திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இருவீட்டார் சம்மதத்துடன் பூதேஷ்வர்நாத் கோவிலில் திருமணமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருமண ஏற்பாட்டுடன் பெண்வீட்டார் கோவிலில் காத்திருக்க மாப்பிள்ளை வீட்டாரோ வரவில்லை..

சற்று கால தாமதமாக வருவார்கள் என நம்பியிருந்த பெண் வீட்டாருக்கு, நேரம் செல்ல செல்ல சந்தேகம் வலுத்துள்ளது. இறுதியாக மாப்பிள்ளையே டிமிக்கி கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட மணப்பெண், மாப்பிள்ளைக்கு அழைப்பு விடுத்து நைசாக பேசி எங்கு செல்கிறார் என்பதை கேட்டுள்ளார்.

மாப்பிள்ளையும் அம்மாவை அழைத்துச் செல்ல வருகிறேன் என போலி சாக்கை கூறியிருக்கார்.

உடனடியாக காலதாமதம் செய்யாமல் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிமோராவுக்கு சென்றுள்ளார் மணப்பெண்... அங்கு மாப்பிள்ளை சென்ற பேருந்துக்குள் புகுந்து, அவரை கீழே இழுத்து வந்துள்ளார்.

அதே வேகத்தில் கோவிலுக்கு மாப்பிள்ளையை தூக்கி சென்ற பெண், அங்கேயே தாலிக்கட்ட வைத்துள்ளார். சினிமா பாணியில் நடந்த இந்த திருமணம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்