மணமேடையில் மரண பீதியுடன் அடிக்கடி தலையை சரிசெய்து கொண்டே இருந்த மணமகன் - கையும் களவுமாக பிடித்து நெம்பியெடுத்த மணமகள்

x

வழுக்கை தலையை மறைத்து செயற்கை முடியின் மூலம் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவரை, கையும் களவுமாக பிடித்த பெண் வீட்டார், மணமகனை அடித்து உதைத்த சம்பவம், பீகாரில் அரங்கேறியுள்ளது. அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தலைக்கு மேல பிரச்சினை இருப்பதாக கூறும் நபர்களுக்கு மத்தியில், தலையே பிரச்சினையாகி போனது இந்த மணமகனுக்கு...

பீகார் மாநிலம் இக்பால் நகரைச் சேர்ந்த நபருக்கு, தலையில் ஏற்பட்ட வழுக்கை காரணமாக, பல வரன்களை பார்த்தும் எதுவும் கைக்கூடாததால் விரக்தி அடைந்துள்ளார்.

தனக்கு மனைவிதான் அமையவில்லை, தலைக்கு விக்-ஆவது சரியாக அமையட்டுமே என ஒரு முடிவுக்கு வந்து, தனது தலையில் புதிதாக விக் ஒன்றை வாங்கி வைத்துள்ளார்.

விக் வைத்த ராசியோ? என்னவோ? தெரியவில்லை, அடுத்ததாக பார்க்கப்பட்ட பெண்ணிற்கு பிடித்துவிட, மணமகனுக்கு ஒரே குதூகலம் தான்..

இதற்கெல்லாம் காரணம் "விக்கு"தான் என உணர்ந்த அந்த நபர், திருமணம் ஆகும் வரையாவது அதனை யாருக்கும் தெரியாமல் மெயின்டெயின் பண்ண வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, கயா மாவட்டத்தை அடுத்த பஜாரியா கிராமத்தில் உள்ள மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. இருதரப்பு வீட்டார் கூடியிருந்து திருமண சடங்குகளை செய்து கொண்டிருந்த நிலையில், மணமகனுக்கோ தலைக்குமேல பிரச்சினை...

ஐயரிடம் மந்திரமெல்லாம் வேணாம்... ஸ்ட்ரெய்ட்டா தாலி கட்டுற மாதிரி ஏதாவது ஒரு மந்திரம் சொல்லுப்பா என மனசுல பட்டாலும், சொல்ல முடியாத சோகம்...

இந்த நிலையில் தான், மணமகன் அடிக்கடி தலையை சரிபார்த்துக் கொள்வது, ஏதோ தலையில் இருந்து கீழே விழுந்திடும் போல நினைத்து சரி செய்வது என பதட்டமாக இருந்ததால், மணப்பெண் வீட்டாருக்கு சற்று சந்தேகம் எழுந்துள்ளது.

திடீரென மணமகன் அருகே சென்ற ஒருவர், அப்படி என்னதான் பா உன் தலையில இருக்கு... எப்ப பார்த்தாலும் தலையிலேயே கை வைச்சிக்கிட்டு இருக்கேனு... திடீர்னு தலையில கை வைச்சபோது, விக்கு மட்டும் தனியாக வந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் வீட்டார், ஆத்திரத்தில் மணமகனை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதால், கல்யாண வீடு களேபரமானது... வேண்டாம்பா... விட்டிருங்கப்பா... எனக்கு கல்யாணமே வேணாம்னு முடிவுக்கு வந்த மணமகன் கையெடுத்து கும்பிட்டும் விட்டபாடில்லை...

விசாரித்தபோது, அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும், அதனை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ய இருந்ததும் பெண் வீட்டாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...

முதல் திருமணத்தை மறைத்திருந்தால் கூட விட்டிருப்பார்கள்... தலையில் விக்கை வைத்து மறைத்ததுதான் பெரிய சம்பவமானதோ? என இந்த சம்பவத்தை பார்த்தவர்களின் மைண்ட் வாய்ஸாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்