பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்...

x

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் குமணன். இவர், கச்சிராயப்பாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி குமணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி கர்ப்பமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், குமணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்