காதலி வீட்டிற்கே சென்ற காதலன்..பெண்ணின் தந்தை கால் திடீர் முறிவு.. மாடிக்கு ஓடிய காதலனால் பரபரப்பு

x

சேலத்தில் தன்னை பார்க்க மறுத்த காதலியின் வீட்டிற்கு சென்று ஆட்டோ ஓட்டுநர் வாக்குவாதம் செய்த போது, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

இவரது மகளை அண்ணா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண் கடந்த சில நாட்களாக தன்னை பார்க்காததால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், அப்பெண்ணின் வீட்டிற்கே சென்று அவரை பார்த்து பேச முற்பட்டுள்ளார்.

இதற்கு அவரது தந்தை மறுக்கவே, அவருடன் தகராறு ஏற்பட்டது.

அப்போது அப்பெண்ணின் தந்தை கால் முறிந்து கீழே விழுந்துள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின் ரஞ்சித்தை பிடிக்க முற்பட்ட போது அவர் வீட்டு மாடிக்கு சென்று தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் பரபரப்பானது.

பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பக்கத்து வீட்டு மாடி வழியாக சென்று ரஞ்சித்தை மீட்டு கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்