முன்னாள் காதலியை வழிமறித்து... கத்தியால் தாக்கிய காதலன்... உறவை முறித்ததால் ஆத்திரம்

x

கொச்சியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் சந்தியா என்பவர் அவரின் உறவினருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்து பேச முற்பட்ட முன்னாள் காதலன் ஃபாரூக்குக்கும் சந்தியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருத்த கத்தியால் சந்தியாவை தாக்க முற்பட்ட போது சந்தியாவின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டு ஓடி வந்ததால் ஃபாருக் தப்பி ஓடினார். உடனே, சந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஃபாருக்கை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்