மனைவியை கிண்டல் அடித்த சிறுவன் - தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து

x

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனது மனைவியை கிண்டல் அடித்த சிறுவனை தட்டிக் கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலூரைச் சேர்ந்த விஜயின் மனைவி சித்ரா, தனது குடியிருப்புக்கு அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் சித்ராவை கிண்டல் அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சித்ராவின் கணவர் விஜய் சிறுவனை அழைத்து கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சிறுவன் கத்தியால் விஜயை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்