மயானத்தில் தொங்கிய இளைஞர் உடல்... மொத்த கிராமமும் அதிர்ச்சியில் உறைந்தது

x

கள்ளக்குறிச்சி அருகே, மயானத்தில் சடலமாக தூக்கில் தொங்கியபடி கிடந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னசேலம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், கடந்த 21 ஆம் தேதி முதல் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் தேடி வந்தனர். இந்த நிலையில், பொட்டியம் கிராமத்தின் சுடுகாடு பகுதியில், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் விக்னேஷ் சடலமாக இருந்துள்ளார். இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்