துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்.. - மீண்டும் டெல்லியை அதிர வைத்த பயங்கரம்
டெல்லி, கீதா காலனியில் உள்ள மேம்பாலம் அருகே பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு பல துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு, லிவ் இன் உறவில் இருந்து வந்த காதலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஷ்ரத்தா என்ற இளம் பெண், 38 துண்டுகளாக காதலனாலேயே வெட்டி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story