ரயில் விபத்தில் சிதறி கிடக்கும் உடல்கள்... உயிரோடு உள்ளனரா? குழப்பத்தில் உறவினர்கள் - உதவிட ஒடிசா அரசு அசத்தல் பிளான்!!

x

ஒடிசா ரயில் விபத்தில் தங்களின் உறவினர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, இறந்து விட்டார்களா என தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் குடும்பத்தினர்களுக்கு உதவிட, ஒடிசா அரசின் உதவியுடன் ரயில்வே அமைச்சகம் முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோரின் புகைப்படங்களை கொண்ட இணைய தள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் பட்டியல் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத நபர்களின் பட்டியலும் இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளது. இது தவிர ரயில்வே உதவி எண் 139-லும், புவனேஸ்வர் மாநகராட்சி உதவி எண் 18003450061/1929 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.


Next Story

மேலும் செய்திகள்