லாரியை ஓவர்டேக் செய்தபோது நிலைதடுமாறிய பைக் - சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்

x

சீர்காழியில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பின்னால் அமர்ந்திருந்த பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக சென்ற மாணவர்களின் வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த ஹரிபிராசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்