3 பேரை ரத்த காவு வாங்கிய கரடி திடீர் மரணம்.. மயக்க ஊசி போட்டு வனத்தில் விட்டதும் சோகம்

x

கடையம் அருகே கடந்த 6ம் தேதி மசாலா வியாபாரி வைகுண்டமணி மற்றும் சகோதரர்கள் சைலப்பன், நாகேந்திரன் ஆகிய 3 பேரை கரடி ஒன்று சரமாரியாக கடித்து குதறியது.

இதை தொடர்ந்து அந்த கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியினர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால் கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

இதில் சிக்கிய கரடிக்கு 2 மயக்க ஊசி செலுத்தி, அம்பை அருகே உள்ள செங்கல்தேரி என்ற அடர் வனப்பகுதியில் நேற்று காலை கரடியை வனத்துறையினர் விட்டனர்.

ஆனால், வனத்துறையினர் கரடியை விட்டுச்சென்ற இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் துரத்தில் அந்த கரடி இறந்து கிடந்ததாக ரோந்து சென்ற வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

10 வயதான பெண் கரடி நுரையீரல் பாதிப்பால் இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்