வாகனத்திற்குள் நுழைந்து பால், தயிரை ருசித்து சாப்பிட்ட கரடி

x

குன்னூர் அருகே வாகனத்தில் இருந்து பால், மற்றும் தயிரையும் கரடி ஒன்று எடுத்து சாப்பிடும் சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டம் உபதலை பகுதியில், விற்பனைக்கு கொண்டு செல்லவதற்காக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பால் மற்றும் தயிரை கரடி ஒன்று எடுத்து சாப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரத்தில் கரடி உலாவுவதை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்