திடீரென இடிந்து விழுந்த பால்கனி.. நிலச்சரிவில் சிக்கி 13 பேர் துடிதுடித்து உயிரிழப்பு

x

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சாவித்ரி, பால்கன், குண்டலிகா, அம்பா உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்மழையால் ராய்காட் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கலாபுரம் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் இருந்து 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட ஒருவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்