ரயில் கூட்டத்தில் அழுத குழந்தை... ஆற்றுப்படுத்தி உறங்க வைத்த தேவதை - மடியில் உறங்கிய குழந்தை காகிதத்தில் ஓவியமாய் மாறிய அதிசயம்

x

நிற்கக் கூட இடமில்லாத ரயிலில் கூட்ட நெரிசலைக் கண்டு மிரட்சியில் அழுத குழந்தையை தன் மடியில் உறங்க வைத்து தட்டிக் கொடுத்து ஆற்றுப்படுத்திய இளம்பெண், மெய் மறந்து தூங்கிய குட்டி தேவதையை காகிதத்தில் ஓவியமாய் தீட்டி அசத்தியுள்ளார்...

ஜன்னலோர இருக்கை... சிலிர்க்க வைக்கும் சாரல்... உடலைக் கதகதப்பாக்க கொஞ்சம் தேநீர்... உள்ளத்ததை கதகதப்பாக்க எம் எஸ் வி-யோ, இளையராஜாவோ, ரகுமானோ இருந்தால் மட்டும் தான் ரயில் பயணங்கள் இனிக்குமா என்ன?...

ஏதேதோ கவலைகளை சுமந்து கொண்டு அயற்சியுடன் பயணித்த ரயில் பயணிகளின் கனத்த மனதை தன் ஓவியத்தால் காகிதத்தை விட லேசாக்கி விட்டார் இந்த இளம் ஓவியர்...


Next Story

மேலும் செய்திகள்